ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித்குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொள்பவர். அதே நேரத்தில் தனக்கு உதவி செய்தவர்களையும், சினிமாவில் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் எப்போதும் மறந்ததில்லை. இதற்கு பல நிகழ்வுகளை சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் யாருக்கும் தெரியாத ஒரு சம்பவத்தை செய்து விட்டு சைலண்டாக இருக்கிறார் அஜித். அதாவது ஆரம்ப கட்டத்தில் அஜித் படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றியவர் சங்கரலிங்கம். இவரது மகன் திருமணம் ஒருசில மாதங்களுக்கு முன்பு நடந்தது. திருமண அழைப்பிதழை பழக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து வந்த போது ஒரு பி.ஆர்.ஓ.வுக்கு கொடுத்திருக்கிறார். அப்போது அஜித்சாருக்கும் அழைப்பிதழ் கொடுங்க என்று அந்த பி.ஆர்.ஓ., சொன்னபோது எங்கே சார் அவர் நம்மை நினைவு வைத்திருக்க போகிறார் என்று பொத்தாம் போக்காக பேசிவிட்டு ஒரு அழைப்பிதழையும் கொடுத்துள்ளார். சங்கரலிங்கம் அழைப்பிதழ் அஜித் கைக்கு சென்றது. அடுத்த நிமிடம் சங்கரலிங்கத்துக்கு, அஜித்திடமிருந்து போன் சென்றது. அத்துடன் லிங்கத்திற்கு ஒரு லட்சத்து ஒரு ரூபாய்க்கு அஜித்திடமிருந்து காசோலை போய் உள்ளது. இதைப்பார்த்துவிட்டு ஒரு கனம் நெகிழ்ந்து போய் நின்றாராம் சங்கரலிங்கம்.