ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் சில ஹிட் படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். அதோடு, ஒரே நேரத்தில் பாம்பு சட்டை, ரஜினி முருகன், இது என்ன மாயம் என மூன்று படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த மூன்றுமே பேசப்படும் ஹீரோக்களின் படங்கள் என்பதால் அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகையாகி விடும் நிலையில் இருக்கிறார் கீர்த்தி. ஆனால் இந்த நேரத்தில், அடுத்தபடியாக அவரை புக் பண்ண சென்ற சில இயக்குனர்கள், அவர் கிளாமராக நடிக்க மறுப்பதாக சொல்வதோடு, வளர்ந்து வரும் நேரத்தில் இப்படியெல்லாம் கண்டிசன் போட்டால் எப்படி வளர முடியும் என்று அவரைப்பற்றி கருத்து கூறி வருகின்றனர்.