ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1992 வரை மணிரத்னம் இயக்கிய படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து வந்தார். ஆனால் அதன்பிறகு ரோஜா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அறிமுகமானார். அதற்கு முன்பு வரை கீபோர்டு பிளேயராக மற்றும் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ரகுமானின் சினிமா வாழ்க்கை அந்த ரோஜா படத்திலிருந்து பெரிய திருப்புமுனையை சந்தித்தது.
அதோடு, மணிரத்னம் கொடுத்த வாய்ப்பினையும் அவர் அழகாக பயன்படுத்திக்கொண்டார். அதனால் தேசிய விருதுகளையும் பெற்ற ஏ.ஆர்.ரகுமான், இப்போது ஆஸ்கர் விருதுகளையும் பெற்று உலகதர வரிசையில் இடம் பிடித்து விட்டார். ஆனபோதும், ரோஜா படத்தில் தொடங்கி இப்போதுவரை மணிரத்னத்தின் அனைத்து படங்களுக்கும் அவரே இசையமைத்து வருகிறார். அந்த வகையில் அவர்களது கூட்டணி 23 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
இதுபற்றி ரகுமான் கூறுகையில், நான் இன்றைக்கு வரை சினிமாவில் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் மணி சார்தான். அவர் எனக்கு ஒரு நல்ல பிளாட்பாரத்தை அமைத்துக்கொடுத்தார். அதுதான் எனது இத்தகையை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. மேலும், என்னை மணிரத்னம் அறிமுகம் செய்யாமல் இருந்திருந்தால், நானும் ஒரு சாதாரணமானவனாகத்தான் இருந்திருப்பேன் என்று கூறும் ஏ.ஆர்.ரகுமான், நான் இன்று வரை நிலைத்து நிற்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு.