ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது , தெலுங்குத் திரையுலகத்திற்கும் அஞ்சலி மீது எப்போதுமே ஒரு கனிவான பார்வை உண்டு. இரு மொழித் திரைப்படங்களிலும் பல யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமான நடிகை எனப் பெயர் வாங்கியவர் அஞ்சலி. தமிழில் அவருடைய திறமையை வெளிப்படுத்திய சில படங்களின் மூலம் முன்னணி இடத்திற்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், அதன் பின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அவரைத் தேடிப் பிடிப்பதே பெரிய வேலையாக இருந்தது.
இங்கிருந்து தெலுங்கிற்குப் போய் அங்கும் ஒரு சில வெற்றிப் படங்களில் நடித்தார். அதன் பின் அங்கும் சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வராமல் இழுத்தடிக்கவே பல வாய்ப்புகளை இழந்தார். தற்போது அனைத்துப் பிரச்சனைகளையும் முடித்து படங்களில் நடிப்பதை மட்டுமே அஞ்சலி கவனம் செலுத்தி வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் அவருக்கு பல புதிய வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கிறதாம். தமிழில் தற்போது 'மாப்பிள்ளை சிங்கம், அப்பா டக்கர்' படங்களில் நடித்துக் கெண்டிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்திலும் அஞ்சலி நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் 'கீதாஞ்சலி 2' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் நாயகியாக நடிக்க அஞ்சலியை அழைத்துள்ளார்களாம்.
இனியாவது, அஞ்சலி அவரைத் தேடி வரும் அழைப்புகளை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வாரா என்பதுதான் கேள்வி. சில வருட இடைவெளி இருந்தும் ஒரு ஹீரோயினுக்கு பெரிய வாய்ப்புகள் வருவது என்பது சாதாரண விஷயமல்ல.