ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியத் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பேசப்படும் ராம்கோபால் வர்மா சர்ச்சையான இயக்குனர்களிலும் குறிப்பிட்டுப் பேசப்படும் ஒருவராக இருக்கிறார். இதற்கு முன் பல ஆக்ஷன், த்ரில்லர் கதைகளை எடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட வர்மா தற்போது கில்லிங் வீரப்பன் என்ற படத்தை இயக்கவிருக்கிறாராம்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் மிகவும் சவால் விட்ட கடத்தல்காரனாக விளங்கிய வீரப்பனின் வாழ்க்கையையும், அவனை போலீசார் சுட்டுக் கொன்றதைப் பற்றிய கதையுமாகத்தான் இந்தப் படத்தை வர்மா எடுக்க உள்ளாராம்.
இந்தப் படத்தில் வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார் வீரப்பனைக் கொன்றவராக நடிக்கிறாராம். இந்தப் படம் குறித்த பத்திரிகைச் செய்தி ஒன்றை ராம்கோபால் வர்மா வெளியிட்டிருக்கிறார்.
அதில்,“பல வருடங்களாகவே வீரப்பனை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றிருந்தேன். கடைசியாக இப்போதுதான் அதைப் பற்றிய முழு ஸ்கிரிப்ட்டை முடித்துள்ளேன். வீரப்பனைப் பற்றி வெளியில் சொல்ல முடியாத மிகவும் ரகசியமான சில ஆதாரங்கள் மூலம் வீரப்பனின் உண்மையான கதையைப் பற்றி அறிந்துள்ளேன். இது தாவூத் இப்ராஹிம் பற்றிய விவரங்களை விட 100 மடங்கு அதிகமானவை. என்னைப் பொறுத்தவரையில் வீரப்பனைக் கொன்றவர்தான் என்னுடைய மிகப் பெரிய ஹீரோ. இந்தப் படம்தான் இதுவரையில் யாராலும் சொல்லப்படாத, யாருக்கும் தெரியாத உண்மையான வீரப்பனைக் கொன்றவரைப் பற்றிய கதையாக இருக்கும்.
இது வீரப்பனைப் பற்றிய கதையல்ல, வீரப்பனைக் கொன்றவரைப் பற்றிய கதை. இதுவரை நான் இயக்கிய அன்டர் வேர்ல்ட் படங்களும், அன்டர் வேர்ல்ட் என்பதும் வீரப்பன் கதையுடன் ஒப்பிடும் போது அவையெல்லாம் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுதான்.இந்த உலகம் இதுவரை பார்த்திருக்காத மிகவும் பயங்கரமான, அபாயகரமான, இரக்கமற்ற ஒருவன்தான் வீரப்பன்,” என்றும் அவருடைய பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடும், தமிழக அரசியல்வாதிகளும் முற்றிலும் மறந்து போன வீரப்பன் விவகாரத்தை மீண்டும் திரைப்படம் மூலம் எழுப்ப நினைக்கும் ராம்கோபால் வர்மா கண்டிப்பாக மிகப் பெரிய சர்ச்சையில் சிக்குவார் என்றுதான் தோன்றுகிறது.