ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்கிற பெருமையைப் பெற்றுக்கிறது 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்'. படம் கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கிறார் நகுல்.
மொழிகளைக் கடந்தும், தேச எல்லைகளைக் கடந்தும் புதிய ரசிகர்களை இந்த படத்தின் மூலம் பெற்றிருக்கிறார். தூத்துக்குடி அகதிகள் முகாமில் இருந்து கல்லூரி மாணவ-மாணவியர் உட்பட 60 பேர் தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் தொலைபேசியில் நகுலின் அலுவலகத்திற்கு தங்கள் மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் ”தங்கள் மனம் கவர்ந்த நாயகனிடம் பேச இயலுமா” என்ற கோரிக்கையையும் வைத்தனர். தனது அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை தேர்வு செய்யும் வேலையில் தீவிரமாக இருந்த நகுலிடம் இலங்கை அகதிகள் முகாம் ரசிகர்களின் விருப்பத்தை அவருடைய உதவியாளர்கள் சொல்ல, மிகவும் நெகிழ்ந்தார் நகுல்.
மறுநாள் முழுவதும் கதை கேட்கும் வேலையை ரத்து செய்து விட்டு அகதிகள் முகாம் ரசிகர்களுடன் தொலைபேசியில் உரையாடினார். 16 லிருந்து 60 வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் விசாரித்து வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.
இதேப்போல் கேரளாவில் இருந்தும் தமிழ்-மலையாள ரசிகர்கள் “கேரளத்தில் ஒரு தமிழ்ப்படம் 25 நாட்கள் ஓடுவது மிகவும் அபூர்வம், 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' அந்த சாதனையைப் புரிந்துள்ளது” எனவும் நகுலின் இயல்பான நடிப்பு குறித்தும் உனர்வுபூர்வமாக பாராட்டு மழை பொழிந்தனர்.
ரசிகர்களின் பாராட்டு மழை ஒரு புறமிருக்க இயக்குநர் ஷங்கர், படம் குறித்து பிரமாதமாக டிவிட் செய்ததும் நகுல் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். அவர் மட்டுமல்ல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ரவி கே.சந்திரன் மற்றும் திரையுலகின் ஜாம்பாவன்களின் பாராட்டுகள் “எனது அடுத்த படம் நிச்சயம் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்கிற உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது” என்கிறார் நகுல்.
குரு ஷங்கர் பாராட்டை தொடர்ந்து நகுலின் தந்தை ஜெய்தேவும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விட்டு, தன் மகனின் முதுகைத் தட்டிக் கொடுத்திருக்கிறார்.
தனது அடுத்தப் படங்கள் குறித்து கூறிய நகுல், “இதுவரை இரண்டு கதைகளைத் தேர்வு செய்து வைத்துள்ளேன், மற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எனது அடுத்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.” என்று தெரிவித்துள்ளார்.