ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மணிரத்னம் இயக்கி உள்ள புதிய படம் ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓகே கண்மணி யூத்புல்லான ஒரு படம். பாடல்களும் அப்படியே இருக்கும். மணிசார் நல்ல நண்பர். எனக்கு இந்த மாதிரி பிளாட்பார்மில் பாட்டு வேணும்னு கேட்டு. புல் ஃப்ரீடம் கொடுத்துட்டு என்ன வேணாலும் பண்ணிக்கோன்னு சொல்லிடுவார். இந்த படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். மணிசாரோட யூத் திங்கிங் இன்னும் குறையலங்றதுக்கு இந்தப் படம் உதாரணம். அடுத்து வைரமுத்து சார் எதிர்பார்க்குறத கொடுத்துட்டு இன்னும் எதிர்பார்க்க வைத்துவிடுவார். இந்த மாதிரி கேச்சிங்கா ஒரு சாங் வேணும்னு கேட்டா உடனே கொடுப்பார்.
படத்துக்கு ஒரு பாட்டு உடனே தேவைப்பட்டது. வைரமுத்து சார் ஊரில் இல்ல. நானும் அமெரிக்கா போக வேண்டியது இருந்தது. உடனே மணிசாரும் நானும் உட்கார்ந்து ஒரு பாட்டு ரெடி பண்ணினோம் அதுதான் "மனமன மெண்டல் மனதில்..." பாட்டு, அவர் ஒரு வார்த்தை சொல்ல நான் ஒரு வார்த்தை சொல்ல அப்படி உருவாச்சு அந்தப் பாட்டு.
படத்தின் நாயகி கர்நாட இசை பாடகி "மலர்கள் கேட்டேன்..." என்ற பாடலை அதற்கேற்றார்போல உருவாக்கினேன். இதை சித்ரா பாடுவதாக முடிவானது. பின்பு இதை ஒரு ஆண் பாடகர் பாடினால் வித்தியாசமாக இருக்குமே என்று முடிவு செய்து நானே டிராக் பாடி வைத்தேன். அதைக் கேட்ட மணிசார் "இதுவே நல்லா இருக்கு நீங்களே பாடிடுங்க"ன்னார். அப்படி உருவாச்சு அந்தப் பாட்டு.
"காரா ஆட்டக்காரா..." பாட்டு படம் முடிந்தும் உருவான பாட்டு. படத்தில் இருக்கிற காட்சிகளை வைத்து அதற்கேற்ப பாடல் எழுதி கம்போஸ் பண்ணினது. "பறந்து செல்ல..." பாடலில் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் லூப் என்கிற ஆப் பயன்படுத்தியிருக்கேன். கார்த்திக் பாடியுள்ளார்.
என் மகன் அமீன் "மவுலா..." என்கிற பாடலை ஆல்பத்துக்காக பாடியிருந்தான். அதை தனி ஆல்பமாக வெளியிட முடிவு செய்திருந்தேன். ஒரு முறை அதைக்கேட்ட மணிசார் "இது யார் பாடினது?" என்றார், அமீன் பாடினது என்றேன். "இது எனக்கு வேணும்" என்றார். படத்துல அதுக்கான சான்ஸ் இல்லையேன்னு சொன்னேன். "அதை நான் பார்த்துக்குறேன்"னு சொல்லிட்டார். அவர் பேச்சை என்னால மீற முடியல. என்னுடைய மகனையும் அவர்தான் சினிமாவில் அறிமுகபடுத்துகிறார்.
தமிழ் பாடல்களை சிரமப்பட்டு பண்ணினதால தெலுங்கு பாடல்களை ஈசியா பண்ணிட முடிந்தது. ஓகே கண்மணி அனுபவங்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.