Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை - ஜோதிகா பேட்டி!

09 ஏப், 2015 - 01:37 IST
எழுத்தின் அளவு:
Age-is-not-bar-for-make-a-record-says-Jyothika

நொடிக்கொரு முறை மாறும் முகபாவம், திரையில் தோன்றும் போதெல்லாம் பூத்து குலுங்கும் உற்சாகம்' என, கோலிவுட்டில், 'எனர்ஜி'யான நடிகையாக சாதித்து காட்டியவர் ஜோதிகா. திருமணம், கணவர், குடும்பம், குழந்தை என, சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த ஜோ, எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ரசிகர்களின் இதயங்களை வசீகரிக்க வந்துள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து...


* எட்டு வருடங்களுக்கு பின், மீண்டும் நடிக்க காரணம் என்ன?


என் மூத்த பொண்ணு தியா, மூன்றாம் வகுப்பு போகப் போறாங்க; தேவ், எல்.கே.ஜி., படிக்கப் போறார். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, அவங்களுக்கான மொத்த வேலைகளையும் செய்துட்டு இருந்தேன்; ஒரு தாயாகவும், மனைவியாகவும் வாழ்ந்து வந்தேன். ஆனால், '36 வயதினிலே' கதை தான், என்னை மீண்டும் நடிக்க அழைத்து வந்தது.


* மீண்டும் நடிப்பதற்கு, உங்களுக்கு துாண்டுகோலாக அமைந்தது எது?


என் தோழிகளின் ஊக்கமும், ஆதரவும் தான் இதற்கு காரணம். இப்படி ஒரு வாய்ப்பு வரும்போது, 'பசங்க வீட்டில் இருக்காங்க; எப்படி அவங்களை பார்த்துக்கிறது?' என்று என் தோழி சாராவிடம் ஆலோசனை கேட்டேன், அவங்க சொன்னாங்க, 'ஜோ, உனக்கு ஒரு விடுமுறை வேணும்; ஒரு சின்ன பிரேக் கிடைக்கணும். இந்தப் படம் கண்டிப்பா நீ செய்' என, சொன்னாங்க. என்னை சுற்றி, 'பாசிட்டிவ் எனர்ஜி' நிறைய இருக்கு. அது தான், நான் திரும்ப கேமரா முன்னாடி வர முக்கிய காரணம்.


* உங்க குடும்பத்தினர் ஆதரவு எப்படி?


என் அத்தை, மாமாவை, அப்பா, அம்மான்னு தான் கூப்பிடுவேன். அவங்க ஒருமுறை கூட, 'ஜோ, இந்த படம் பண்ணாத, வேண்டாம்'ன்னு எந்த ஒரு, 'நெகட்டிவ்' வார்த்தையும் சொல்லவில்லை. அப்பா வந்து, காலைல பசங்கள ஸ்கூல்ல விடுவாங்க; அம்மா, சாப்பாடு அனுப்புவாங்க. கார்த்தி, பிருந்தா இப்படி, குடும்பமே எனக்கு ஆதரவா இருந்தாங்க. என் குடும்பத்துக்கு ஒரு பெரிய நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.


* உங்களுக்கு வழிகாட்டியாக இருந்த இயக்குனர்கள்?


பிரியதர்ஷன் சார் என்னை அறிமுகப்படுத்தினார். ஆனால், எனக்கு எல்லாம் சொல்லி கொடுத்தது வசந்த் சார். எனக்கும், சூர்யாவுக்கும் முதல் படம், முதல் வாய்ப்பு; மறக்க முடியாதது. நிறைய விஷயங்களை, திட்டி சொல்லிக் கொடுத்திருக்கார். வண்ணமயமாக எங்க வாழ்க்கை துவங்கியது. என் கேரியரில் ரொம்ப முக்கியமாக, 'மொழி' என்ற படத்தை கொடுத்தவர் ராதா மோகன்.


* 36 வயதினிலே பட இயக்குநர் ரோஷன் பற்றி.?


மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'ஹவ் ஓல்டு ஆர் யூ'' படத்தின் இயக்குநரை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்துட்டோம். என் கேரியரில் நான் எடுத்து வைக்கும் அடுத்த படி ஒரு நல்ல படமாக கொடுத்திருக்கிறார் ரோஷன். அதற்காக அவருக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. ஒரு ஆண், பெண்களை பற்றி ஒரு கதையை எழுதியது ரொம்ப பெரி விஷயம். தமிழில் பெண்கள் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகம் வருவதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. மற்ற மொழிகளில் நிறைய பெண்களை மையப்படுத்தி படங்கள் வருகிறது. இந்த படம் நல்ல மெஸேஜ் உள்ள படமாக இருக்கும், கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.


* உங்கள் கணவர் சூர்யா பற்றி..?


இந்த படத்தோட தயாரிப்பாளர் சூர்யா, என்னோட உலகம். சென்னைக்கு நான் முதல் முறையாக வந்தபோது நான் சந்தித்த மதல் ஆள் சூர்யா தான். அப்போது இருந்து இப்போது வரை என் பக்கத்தில் ஒரு தூண் போன்று துணையாக இருக்கிறார். ஒரு நல்ல கணவராக, தந்தையாக அவர் தன் கடமைகளை செய்கிறார். எப்பவும் எனக்கு சப்போர்ட் பண்ணுவார். கல்யாணமும் சரி, இப்போது திரும்பவும் நடிக்க வந்ததும் சரி, மிகவும் சப்போர்ட் பண்ணினார். இப்படி ஒரு மனுஷனை கல்யாணம் பண்ணியது பெருமையாக இருக்கிறது. இந்த நாள், இந்த விழா, இந்த படம்... இதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது.


* ஒரு தயாரிப்பாளராக சூர்யா பற்றி...?


தான் தயாரிப்பாளர் என்பதாலோ, மனைவி இந்தப்படத்தில் நடிக்கிறாள் என்பதாலோ அவர் தினம் செட்டுக்கு வர்றது, அடிக்கடி கேள்வி கேட்பது போன்று எதுவும் கிடையாது. 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருவார். மற்றபடி எல்லா தேவைகளையும் சரியாக செய்திடுவார். என்ன வேண்டும் என்பதிலிருந்து இன்றைக்கு செட்டில் என்னென்ன தேவை என்பது வரை எல்லாவற்றையும் சரியாக செய்வார். யாருக்கும் எந்தை குறையும் இல்லாமல் பார்த்து கொள்வார்.


தியா, தேவ் ஆகியோரது பெயரில் தான் 2டி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தோம். இப்போது 4 படங்கள் தயாரிக்கிறோம். மேலும் நல்ல நல்ல படங்கள் தரணும், தயாரிக்கணும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கிறது. இந்த படத்தில் 53 நாட்கள் ஷூட்டிங் பிளான் செய்து 46 நாளில் படத்தை எடுத்து முடித்து கொடுத்து தயாரிப்பாளருக்கும் பெரும் செலவை குறைத்தார் இயக்குநர் ரோஷன். படத்தில் வரும் வீடு திருவல்லிக்கேணியிலும், அலுவலகம் செட் பின்ன மில்லிலும் எடுத்தோம். ரிச் லுக் வர்ற மாதிரி இயக்குநர் கேட்டது எல்லாவற்றையும் ஒரு தயாரிப்பாளராக சூர்யா, நிறைவாய் செய்து கொடுத்தார்.


*இரண்டு குழந்தைகளையும் வச்சிக்கிட்டு நடிப்பையும், குடும்பத்தையும் எப்படி சமாளிச்சீங்க?


அது ஒரு நல்ல அனுபவம்ன்னு சொல்வேன். படம் முழுக்க சென்னையில் தான் எடுத்தோம். படம் ஆரம்பிப்பது டில்லியில்; கிளைமாக்ஸ் காட்சியும் அங்கே தான் எடுத்தோம்; மற்றபடி சென்னை தான். கிறிஸ்துமஸ், புத்தாண்டு தவிர, எந்த நாளும் விடுமுறை விடவில்லை; ஞாயிறு கூட, 'ஷூட்டிங்' இருந்தது. காலை, 7:00 மணிக்கு துவங்கினால், இரவு, 11;00 மணி வரை போகும். என் கணவராக, படத்தில் நடிகர் ரகுமான் நடித்திருந்தார். ரகுமான் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதுக்கு நன்றி. படத்தில் அபிராமியும் நடிச்சிருங்காங்க.


* '36 வயதினிலே' படம் சொன்ன பாடம்?


ரொம்ப வித்தியாசமான படம் பண்ணனும் என்பதற்காக இந்த படம் பண்ணல; இந்த படம் கொஞ்சம் ஸ்பெஷல் படம். படத்தில் வேலை பார்த்த எல்லா ஆண் டெக்னீஷியன்களும், இந்த மாதிரி ஒரு கதையை நம்புறாங்க. அவங்க மனைவி எல்லாம், செட்ல, அவங்க கணவருக்கு ரொம்ப உதவியா இருக்காங்க. குறிப்பா, கேமராமேன் திவாகர், அவங்க மனைவி பிரவீணா இந்த படத்தில் அவங்களுக்கு உதவி செய்திருக்காங்க.


* உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் போலிருக்கிறதே?


ஆம்; அதற்கு காரணம், என் அம்மா, சின்ன வயதில் என்னை, என் தம்பி எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்த்தாங்க, வளர்த்தாங்க. அதனால் தான் இப்ப வரை பெரிய தன்னம்பிக்கையோட இருக்கேன்.


* பெண் சக்தியை அடிப்படையாக வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதா?


ஆம்; இந்த படம் வந்ததும், ஒவ்வொரு ஆணுக்கும், பெண்களின் சக்தி பற்றி தெரியும். இந்த சமூகத்தில் பெண்கள் மதிப்பு உயர்வதற்கும், அவர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்வதற்கும் ஆண்கள் துணை நிற்பர். இதெல்லாம், '36 வயதினிலே' படம் சொல்லும். எதையும் சாதிக்க, வயது ஒரு தடையே இல்லை. வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கணும்; அவ்ளோ தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in