ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா-நயன்தாரா நடித்த படம் ஈ. அந்த படம் வெற்றி பெற்றது. ஆனபோதும் அதையடுத்த ஜீவா-நயன்தாரா இருவரும் ஜோடி சேரவில்லை. இந்த நிலையில், யான் படத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் புதிய படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்தபோது அவர் ஜீவாவுடன் நடிக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது. அதனால் அவருக்கு பதிலாக ஸ்ரீதிவ்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொன்னார்கள்.ஆனால் இப்போது ஜீவாவின் புதிய படத்தில் நயன்தாராவே நடிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
அந்த படத்தை ஜீவாவின் தந்தையான ஆர்.பி,.செளத்ரியே தயாரிக்கிறாராம்.மேலும், தற்போது ஜீவாவை வைத்து படம் தயாரிக்க எந்த பட நிறுவனமும் முன்வரவில்லை என்ற செய்தியும் பரவலாக வந்துகொண்டிருக்கிறது.
ஆனால், இதுகுறித்து ஜீவா தரப்பை கேட்டபோது, இப்போதும் அவரை வைத்து படம் தயாரிக்க 4 கம்பெனிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால், தொடர் தோல்விகளை தவிர்க்க வித்தியாசமான கதைகளை தேடும் ஜீவா, அந்த படங்களில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர் தந்தை கேட்டு வைத்திருந்த கதை வித்தியாசமாக இருப்பதால் அந்த படத்தில் நடிக்க ஓகே செய்திருக்கிறார் என்கிறார்கள்.