விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த கொம்பன் படம் நேற்று வெளியானது. இந்த படத்தில் சாதி பிரச்னைகள் பற்றி காட்டப்படுவதாக பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் படத்தில் அப்படி எதுவுமே இல்லை என்பது நேற்று படம் வெளிவந்ததும் தெரிந்து விட்டது.
இந்த பிரச்னையை பெரிதாக கிளப்பியவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் தற்போது தி.மு.க அணியில் இருக்கிறார். கொம்பன் அதிகப்படியான தியேட்டர்களை பிடித்து விட்டதால் நண்பேன்டா படத்துக்கு தான் நினைத்த தியேட்டர் கிடைக்காத கோபத்தில் உதயநிதி தான் கிருஷ்ணசாமியை தூண்டிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டது.
இதனை உதயநிதி கடுமையாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நண்பேன்டா படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாத்திற்கு முன்பே அறிவித்து விட்டேன். கொம்பன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே எனது படம் 275 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது. கொம்பன் படம் வந்தாலும், எத்தனை தியேட்டர்களில் திரையிட்டாலும் அதனால் என் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் ஏன் கொம்பனை தடுக்க வேண்டும். பிறகு ஏன் என் பெயரை இழுத்து பேசுகிறார்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை விளம்பரத்திற்காக என் பெயரை பயன்படுத்துகிறார்களோ என்று சிந்திகிக்க வேண்டியதிருக்கிறது என்கிறார் உதயநிதி.