ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாரதிராஜாவால் கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ப்ரியாமணி. அதன் பிறகு அது ஒரு கனா காலம், மது படங்களில் நடித்தார். பருத்தி வீரன் படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. தேசிய விருதின் மூலம் புகழ்பெற்றார். ஆனால் அதற்கு பிறகுதான் அவருக்கு சறுக்கல் தொடங்கியது. காரணம் அவர் கிளாமர் பாதையை தேர்ந்தெடுத்ததுதான். பருத்தி வீரனுக்கு பிறகு வெளிவந்த மலைக்கோட்டை, ஆறுமுகம், படங்களில் கிளாமராக நடித்தார். அது அவருக்கு உதவில்லை. அதன் பிறகு தெலுங்கு பக்கம் போய்விட்டார். 2010ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ராவணன் படம்தான் அவர் கடைசியாக நடித்த தமிழ் படம். அதன் பிறகு சாருலதா என்ற கன்னட படம் தமிழில் டப்பாகி வெளிவந்தது. தற்போது மீண்டும் அவர் 6 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
மிஷ்கின் உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா என்பவர் காமெடி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கதை, திரைக்கதையை எழுதியிருக்கும் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இதில் கற்றது தமிழ் ராம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ப்ரியாமணி ஹீரோயினாக நடிக்கிறார். இன்னுமொரு இளம் ஹீரோ நடிக்கிறார். அவர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.