ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இருபது வருடங்களுக்கு முன் பாசில் இயக்கி, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம் மணிச்சித்திரதாழு. ஷோபனாவுக்கு தேசியவிருது வாங்கித்தந்த இந்தப்படம் தமிழில் சந்திரமுகியாக வந்து சூப்பர் ஹிட்டாக ஓடியதோடு, மற்ற மொழிகளிலும் ரீ-மேக் ஆனது. 'மணிச்சித்திரத்தாழு படத்தில் டாக்டர் சன்னியாக மோகன்லால் நடித்திருந்தார். இந்தப்படத்தை கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் முதலில் ரீமேக் செய்த பி.வாசு, அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார்..
தொடர்ந்து சில வருடங்கள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ஆப்த ரட்சகா என்ற பெயரிலும், தெலுங்கில் அதே இரண்டாம் பாகத்தை நாகவல்லி என்கிற பெயரிலும் ரீமேக் செய்து பம்பர் ஹிட் அடித்தார் பி.வாசு. தற்போது மலையாளத்தில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. ஆனால் ஸ்ரீகுமார் ஆறுக்குட்டி என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.. இரண்டு வருடங்களுக்கு முன் மோகன்லால் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' படம் மணிச்சித்திரத்தாழுவின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டாலும் கூட, அது ஒருகிளைக்கதையாகத்தான் இருந்ததே தவிர அது முழுமையான இரண்டாம் பாகம் அல்ல என்பதுதான் உண்மை.