ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். இந்த கூட்டணியில் தற்போது சிபி கே.தாமஸ் முதன்முதலாக டைரக்சன் ஏரியாவில் கால் வைத்திருக்கிறார். இவரது முதல் படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பவர் ஜனப்ரிய நாயகன் திலீப். பின்னே கிட்டத்தட்ட திலீபன் இருபது ஹிட் படங்களுக்கு கதை எழுதியவராயிற்றே..
சிபி படத்தை இயக்கினாலும் உதயகிருஷ்ணாவுக்கும் இதில் கதாசிரியராக முக்கிய பங்கு இருக்கிறது. சிபியுடன் கூட்டணி சேர்வதற்கு முன்னரே பாலு காரியத், சந்தியா மோகன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் உதயகிருஷ்ணா.. மற்றுமொரு முக்கியமான செய்தி, தற்போது விகாஷ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க இருக்கும் புலி முருகன் படத்திற்கு தனியாகவே கதை எழுதுகிறார் உதயகிருஷ்ணா.