ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நதிகள் நனைவதில்லை இயக்குனர் பி.சி. அன்பழகன் அந்த படம் தொடங்குவதற்கு முன்பாக தற்போது படத்தில் நடித்திருக்கும் மதுரை முத்து கேரக்டரில் நடிக்க கவுண்டமணியிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். இதற்காக பூங்கொத்து வாங்கிக்கொண்டு நார்த்போக் சாலையில் உள்ள கவுண்டர் அலுவலகத்திற்கு இரண்டு மூன்று முறை சென்று கவுண்டரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார் இயக்குனர். இருந்தாலும் முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்று நான்காவது முறை கவுண்டரை சந்தித்து விட்டார் அன்பழகன். இவரை அன்போடு வரவேற்ற கவுண்டர் விஷயத்தை சொல்லுங்க என்று கேட்டுள்ளார். என்னோட படத்தில் நீங்க நடிக்கனும் அதுக்கு கால்ஷீட் கொடுங்க சம்பளம் எவ்வளவாக இருந்தாலும் பரவாய் இல்லை என்று அன்பழகன் சொல்ல, ஒரு மேடை பேச்சாளர், எழுத்தாளர் நிலையிலிருந்து இப்போது இயக்குனராக உயர்ந்திருக்கிங்க. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள். இப்போதைக்கு வேணாம் பிறகு பார்க்கலாம் என்று கூறி பூங்கொத்தை அன்பழகனுக்கே திருப்பிக் கொடுத்து வழியனுப்பி விட்டாராம் கவுண்டர். பிறகுதான் மதுரை முத்துவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.