ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
முன்னணி நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரை முன்னணி டைரக்டர்களே கதை சொல்ல வந்தாலும், அதில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து அவர்களை ஒரு வழி பண்ணி விடுவார்கள்.அதோடு சில ஹீரோ-ஹீரோயினிகள் என்னுடைய ரசிகர்கள் இப்படியெல்லாம் நான் நடித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நான் சொல்வது போன்று சில காட்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள் என்பார்கள்.
அந்த வரிசையில் சமந்தாவுக்கு முதலிடம் கொடுக்கலாம்.அந்த அளவுக்கு எனக்கான காட்சிகளை அப்படி வையுங்கள் இப்படி வையுங்கள் என்று டைரக்டர்களிடம் அன்புத்தொல்லை செய்வார். அவருக்கு மார்க்கெட் இருப்பதால் டைரக்டர்களும் அதற்கு செவிசாய்த்தே வருகின்றனர்.
ஆனால். பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிப்பதற்கு அவரை விஜய்மில்டன் தொடர்பு கொண்டபோது, விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் சமந்தா. என்ன கதை. அதில் எனது கதாபாத்திரம் எப்படி வருகிறது என்று எதுவுமே கேட்கவில்லையாம்.