விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
1989-ல் பூமனம் என்ற படத்துக்கு இசையமைக்கத் தொடங்கிய வித்யாசாகர், அதையடுத்து நிலாப்பெண்ணே படத்துக்கு இசையமைத்தவர், பின்னர் தெலுங்குக்கு சென்று விட்டார். பல ஆண்டுகளுக்குப்பிறகு அர்ஜூன் நடித்த ஜெய்ஹிந்த், கர்ணா படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழில் பேசப்படும் இசையமைப்பாளரானார்.
அதன்பிறகு பாரதிராஜாவின் பசும்பொன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ரஜினி நடித்த சந்திரமுகியில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். கடைசியாக, தமிழில் விமல் நடித்த ஜன்னல் ஓரம் படத்துக்கு இசையமைத்த வித்யாசாகர், தற்போது வடிவேலு நடிக்கும் எலி படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்துக்கு மெலோடி பாடல்களே வேண்டும் என்பதால் லேட்டஸ்ட் இசையமைப்பாளர் யாரும் வேண்டாம் என்று முடிவெடுத்த வடிவேலு, வித்யாசாகரை அழைத்து தன் விருப்பத்திற்கேற்றபடி பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறார். இதற்கு முன்பெல்லாம் பாடல்கள் விசயத்தில் தலையிடாமல் இருந்த வடிவேலு, இந்த படத்தைப்பொறுத்தவரை கதை விவாதம் நடந்தபோதே கம்போசிங்கிலும் கலந்து கொண்டு, ஏராளமான டியூன்களை போட வைத்து அதிலிருந்து தனக்கு பிடித்தமான டியூன்களை செலக்ட் பண்ணியிருக்கிறாராம்.