ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரு ஆண்டுக்கு முன்பு நாயகனாக நடித்து படத்தை இயக்கினார் அமீர். இந்த படத்துக்கு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று தலைப்பு வைத்தார். படப்பிடிப்பு பெரிய குளத்தில் தொடங்கியது. பத்து நாட்கள் மட்டும் ஷூட்டிங் போனது. சில காரணங்களால் படப்பிடிப்பு நின்று விட்டது. பிறகு படப்பிடிப்பு தொடரவே இல்லை. இதை வைத்து அமீர் படம் பிளாக்காகி விட்டது என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில் புலி பதுங்கியிருந்து பாயும் என்பதை போல நிறுத்தி வைத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்குகிறார் அமீர். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. இதில் நாட்கள் மட்டும் தான் இடைவெளி ஆனதே தவிர மற்ற எதும் மாற்றம் ஆகவில்லை. ஜெயிக்கணும் என்கிற வெறியில் படத்தை தொடர்கிறார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.