ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய வர்த்த தொழில் கூட்டமைப்பின் கூட்டம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திரைப்படங்களுக்கான தணிக்கை முறை பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கமல்ஹாசன், ஆமீர்கான் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆமீர்கான், 'விஸ்வரூபம்' பட வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்ட போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக செயல்பட முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “விஸ்வரூபம் பட வெளியீட்டுப் பிரச்சனையின் போது கமல்ஹாசனுக்கு ஆதரவாக அப்போது நான் இருக்க முடியாத நிலை குறித்து வெட்கப்படுகிறேன். அந்த சமயத்தில் அவருடன் இணைந்து நான் செயல்பட்டிருக்க வேண்டும். நான் உங்களிடம் அனைவர் முன்னிலையிலும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அப்போது நாங்கள் உங்களுடன் இல்லாதது குறித்து நினைத்து வருத்தப்படுகிறேன். ஒரு படத்தைத் தடை செய்வது சரியல்ல. ஒரு படம் சான்றிதழ் பெற்றதும் அந்தப் படத்தை மக்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்க்கும் நிலையை உருவாக்குவது அந்த மாநிலத்தின் பொறுப்பாகும்,” என்று ஆமிர் கான் பேசினார்.
ஆமீர்கானின் பேச்சை முன் வரிசையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த கமல்ஹாசன் அதை ஆமோதிக்கும் வகையில் தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார்.