ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரண்மனை படத்தில் பேயாக நடித்த நேரமோ என்னவோ லட்சுமிராயை பேய் கேரக்டருக்கு என்றே பிராண்டிங் பண்ணிவிட்டார்கள். ஸ்ரீகாந்த் நடிக்கும் சவுகார்பேட்டை படத்திலும் பேயாக நடிக்கும் லட்சுமிராய் இனி பேய் வேடத்தில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சவுகார்பேட்டை படத்தின் துவக்கவிழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத்லேபில் நடைபெற்றது. அப்போது சில பத்திரிகையாளர்களிடம் மனம்விட்டுப்பேசினார் லட்சுமிராய். பல விஷயங்களைப் பற்றி பேசிய லட்சுமிராயிடம் த்ரிஷா பற்றி கேட்டபோது செம கடுப்பாகி இருக்கிறார். த்ரிஷா எனது முன்னாள் தோழி, ஆனால் இப்போது அப்படியில்லை என்று கூறிவிட்டார். மேலும் தனக்கு நெருக்கமானவர்களிடம் த்ரிஷா மீது தான் கொண்ட வெறுப்பிற்கான காரணத்தையும் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
த்ரிஷா மீது லட்சுமிராய்க்கு ஏன் இவ்வளவு கடுப்பு?
த்ரிஷாவும் லட்சுமிராயும் ஒருகாலத்தில் நெருங்கிய தோழிகளாக இருந்தார்கள். தங்களின் அந்தரங்க விஷயங்களைக் கூட பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு அன்னியோன்யமாக இருந்திருக்கிறார்கள். பட அதிபர் வருண்மணியன் லட்சுமிராய்க்குத்தான் நெருக்கமானவர். அவரை தன் பாய் பிரண்ட் என்று பலரிடம் அறிமுகப்படுத்தி வந்த லட்சுமிராய் த்ரிஷாவிடமும் வருண்மணியனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அந்த இன்ட்ரோவைப் பயன்படுத்தி வருண்மணியனிடமிருந்து லட்சுமிராயை பிரித்து தன்னுடைய காதலராக்கிக் கொண்டாராம். அதுதான் த்ரிஷா மீது லட்சுமி ராய்க்கு இவ்வளவு கோபமாம்.