பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார். சூர்யாவின் போட்டியாளரான ஹீரோக்கள் ரசிகர் மன்றம் வைத்தனர். அதுமட்டுமல்ல, ஒரு கட்டத்தில் சூர்யா நடித்த படங்கள் ஒடும் தியேட்டர்களில் கலாட்டா செய்து படத்தை ஓடவிடாமல் சிலர் செய்தனர். எனவே தானும் ரசிகர் மன்றம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சூர்யா.
அவரது தம்பியான கார்த்தியோ முதல் படத்தில் நடிக்கும்போதே அகில இந்திய ரசிகர் மன்றம் ஆரம்பித்துவிட்டார். ரசிகர் மன்றம் வைத்திருந்தாலும் ரசிகர்களை அடிக்கடி சந்திக்காமல் இருந்த கார்த்தி கெம்பன் படம் வெளிவருவதை முன்னிட்டு அண்மையில் ரசிகர்களை சந்தித்து உரையாடினார். தான் என்ன மாதிரியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் கார்த்தி. நீங்கள் ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடித்தால் சூப்பராக இருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவிக்க வெறுத்துப்போய்விட்டாராம் கார்த்தி.