ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிருகம், ஈரம், அய்யனார் படங்களில் நடித்தபோது படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த ஆதி, வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த அரவான் படம் தனது மார்க்கெட்டை ரொம்ப உசரத்துக்கு கொண்டு போகப்போகிறது என்று நம்பி நடித்தார். ஆனால் அந்த படமோ அவரை உசரத்துக்கு தூக்கி கொண்டு போய் கீழே போட்டு விட்டது.
அதனால் கோச்சடையான், வல்லினம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த ஆதி, யாகவராயினும் நாகாக்க படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார். ஒரு தவறான வார்த்தை எவ்வளவு பெரிய பிரச்னையை உண்டாக்கி விடுகிறது என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
ஆனால், பல மாதங்களுக்கு முன்பே இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டபோதும், எதிர்பார்த்தபடி வியாபாரமாகவில்லை. அதனால் தடுமாறிக்கொண்டு வந்தார் ஆதி. அந்த நேரம்பார்த்து அவரது பட நாயகியான நிக்கி கல்ராணி நடித்த டார்லிங் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விளைவு, இப்போது அவரது பெயரை முன்வைத்தே படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் ஆதி. நிக்கி கல்ராணியை இந்த படத்துக்கு புக் பண்ணியபோது தெலுங்கில் இவர் பெயரை வைத்து படத்தை விற்பனை செய்யலாம் என்று நினைத்திருந்த ஆதியை, இப்போது தமிழுக்கும் அவரே கைகொடுத்து காப்பாற்றியிருக்கிறார். அதோடு, நிக்கி கல்ராணிக்காகவே தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையும் இப்போது ஆதிக்கு ஏற்பட்டு, அவரது நம்பிக்கை நட்சத்திரமாகியிருக்கிறார் நிக்கி கல்ராணி.