சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமூக கண்ணோட்டத்துடன் படம் எடுத்து சர்ச்சைகளை சந்தித்து பின்னர் திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் இயக்குனர் 'உயிர்' சாமி. இவர் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கங்காரு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரித்திருந்தார். காங்காரு உருவாவதற்கு பின்பு படபிடிப்பு நடந்து இவர் தயாரிப்பில் திரைக்கு வந்த படம் நாகராஜன் சோழன். ஆனால் காங்காரு திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. சிக்கலுக்கான காரணம் பணம். இதனை சரி செய்ய சாமி தன் காரை விற்று பணம் கொடுத்திருக்கிறார் இந்த பணமும் இன்னும் சாமிக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் கங்காரு படம் திரைக்கு வர உள்ளது. இது ஒரு புறமிருக்க நேற்று முன்தினம் தமிழில் உருவான சில படங்களுக்கு தொழில்நுட்ப கலைஞர், பாடல் ஆசிரியருக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. குறிப்பாக குற்றம் கடிதல் என்ற குறும்படத்தை பெரும் படமாக்கி திரையிடாமல் விருதுக்கு அனுப்பி விருதை வாங்கி விட்டனர். இதே போல காங்காரு படத்தை அனுப்பியிருந்தால் என் படத்துக்குதான் விருது கிடைத்திருக்கும் என வருந்துகிறார் சாமி.