ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஷங்கர் இயக்கிய, காதலன் படத்தில், ''என்னவளே அடி என்னவளே...'' என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் உன்னி கிருஷ்ணன். முதல்படத்திலேயே தான் பாடிய பாடலுக்காக தேசிய விருதை பெற்றார் உன்னி கிருஷ்ணன். அதன்பின்னர் பல படங்களில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தற்போது அவரது 10வயது மகள் உத்ரா உன்னியும் பின்னணி பாடகியாக களமிறங்கியுள்ளார்.
கடந்தாண்டு விஜய் இயக்கத்தில் வௌிவந்த சைவம் படத்தில், ''அழகே அழகே...'' என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடலுக்காக உத்ராவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாது இப்பாடலை எழுதிய நா.முத்துகுமாருக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
தான் பாடிய முதல் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது போன்று, தனது மகள் பாடிய முதல் பாடலுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியுள்ளார் ஆழ்ந்துள்ளார் உன்னி கிருஷ்ணன். இதுகுறித்து உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளதாவது, என் மகள் பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை, இது கடவுள் தந்த பரிசாகத்தான் நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.