ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எப்பவுமே சினிமாவை பொறுத்தவரை ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதற்கு பல படங்களை சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் தற்போது வரும் இயக்குநர்கள் அந்த நிலையை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டு வருகிறார்கள். இயக்குநர் ராஜ் கிரண் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரிபுரா என்ற படம் நாயகியை மையமாக வைத்தே உருவாகி வருகிறதாம்.
இதற்கு முன்பு ராஜ் கிரண் இயக்கிய கீதாஞ்சலி திரைப்படமும் நாயகியை மையமாக வைத்தே உருவானது, அப்படம் ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. திரிபுரா படத்தில் நடிகை சுவாதி தான் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற வியாபார நோக்கத்தையும் மனதில் வைத்தே இந்த படம் உருவாகி வருகிறதாம். மேலும் இப்படம் சம்பந்தமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.