ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தெலுங்கு சினிமாவிற்கு இந்த ஆண்டு சோதனையாகவே அமைந்திருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை 20 தெலுங்கு சினிமா பிரகமுகர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். பட அதிபர் டி.ராமாநாயுடு, இசை அமைப்பாளர் சக்ரி, இயக்குனர் வி.பி.ராஜேந்திர பிரசாத், கதாசிரியர் கணேஷ் பத்ரோ, நடிகர்கள் பிரசாத், எம்.எல்.நாராயணா ஆகியோர் மரணமடைந்தவர்களில் முக்கியமானவர்கள். கடந்த ஆண்டும் மரணங்கள் அதிகமாக இருந்தது. ஆந்திர பிரதேசத்தை இரண்டாக பிரித்தது முதல் தெலுங்கு சினிமாவிற்கு சோதனை காலமாகத்தான் இருக்கிறது.
இதற்காக தெலுங்கு திரையுலகினர் ஒன்றிணைந்து மகா மிருத்யுஞ்சயா யாகம் நடத்தினார்க்ள. ஐதராபாத் பிலிம் சிட்டியில் உள்ள கோவில் வளாகத்தில் நடந்த இந்த யாகத்தை ஸ்ரீ சொரூபனாந்தேந்தி சரஸ்வதி சாமிகள் தலையில் ஏராளமான வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை நடிகரும், தெலுங்கு தேச எம்.பியுமான முரளி மோகன் செய்திருந்தார். ஏராளமான தெலுங்கு நட்சத்திரங்கள் யாகத்தில் கலந்து கொண்டனர்.