ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் இருந்து வந்தவர்தான் என்றாலும் தமிழ் சினிமாவுக்காக பாடுவது, நடிப்பது என்று மலையாள சினிமாவை மறந்து இங்கேயே தங்கிவிட்டவர்தான் ஆண்ட்ரியா. போனால் போகிறதென்று முதன்முதலாக பஹத் பாசிலுடன் இணைந்து மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' படத்தில் நடித்தார். படமும் சூப்பர்ஹிட்டுதான். அப்புறம் கொஞ்சநாள் இடைவெளி விட்டவர் அதையடுத்து 'லண்டன் பிரிட்ஜ்' என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார்.
அவ்வளவுதான்.. அதன்பின் மலையாள சினிமா பக்கம் பார்வையை திருப்பவே இல்லை. தமிழைவிட அங்கே சம்பளம் குறைவு என்பதும் ஒரு காரணம் தான். மம்முட்டியுடன் 'பயர்மேன்' படத்தில் நடிப்பதாg அறிவிப்பு வந்தது.. ஆனால் நடிக்கவில்லை. தற்போதுகூட மோகன்லாலுடன் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் தொடங்கினால் தான் அது கூட உறுதியாகும்.