ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் சசிக்குமாரின் "ஈசன்" பட ஆடியோ ரிலீஸ் சத்யம் திரையரங்கில் நடைபெற்றபோது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சசிக்கு சிறப்பு பூங்கொத்து கொடுத்து கௌரவித்தனர். காரணம் தான் தயாரித்த "பசங்க" படத்திலும், நாயகனாக நடித்த "நாடோடிகள்" படத்திலும் தயாரிப்பாளர் ஜெய்பிரகாஷ்க்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்து அவரை பிஸியான நடிகராக்க காரணமாயிருந்த சசி, இப்பொழுது ஈசன் படத்தில் அதே தயாரிப்பாளர் ஜெய்பிரகாஷின் வாரிசுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்திருப்பதோடு, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், காஜாமைதீன் உள்ளிட்டவர்களுக்கு முக்கிய பாத்திரங்கள் கொடுத்திருப்பது தான் இந்த சிறப்பு கௌரவத்திற்கு காரணமாம். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பூங்கொத்தை கொடுத்த சங்க செயலாளர் கே.முரளிதரன், தொடர்ந்து தயாரிப்பாளர்களை நடிகர்கள் ஆக்குவதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் சசி என்று கூறியதுடன், இதுமாதிரி மற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களை நடிகர்கள் ஆக்க முன்வர வேண்டும் என்று கைப்பிடித்து வேண்டுகோள் விடுத்தார். இதுஎப்படியிருக்கு...?