தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? |
அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம்தான் மன்மதன் அம்பு. மிதக்கும் கப்பலில் மனித உறவுகளுக்கு இடையே நடக்கும் உறவுகளை ரொமான்டிக் கலந்த காமெடியில் சொல்லப்போகும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இப்படம் பற்றிய ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:
* பாரீஸ் நகரில் தொடங்கி சூட்டிங் பெரும்பாலும் ஐரோப்பாவின் முக்கிய துறைமுக நகரங்களான பார்சிலோனா, ஜனோவா, அன்னிசி, ஷெத்தோ ரெனாட் உள்ளிட்ட இடங்களிலும், இத்தாலிய பகுதியில் வெனிஸ் மற்றும் ரோமிலும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சில பகுதிகளிலும் தமிழ்நாட்டில், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் இறுதிகட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கியுள்ளனர்.
* மத்திய தரக்கடலில் மிதக்கும் பிரம்மாண்ட கப்பலில் பெரும்பாலான கதை நிகழ்கிறது. நகைச்சுவை உணர்வுடன், மனித உறவுகளுக்கு இடையேயான உறவுகளை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
* நாயகன் கமல்ஹாசன் மேஜர் ஆர்.மன்னாரு கேரக்டரில் நடிக்கிறார். நட்புக்கும் - காதலுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அவர் படும் பாடு கலகலப்பாக இருக்குமாம்.
* கமலுக்கு ஜோடியாக வரும் த்ரிஷா இப்படத்தில் தமது சொந்த குரலில் பேசியுள்ளார். அம்பு ஜாக்ஷி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர், கவிதை ப்ரியாராக இருப்பதுடன், கவிகளையும் வாசித்திருப்பது ஹைலைட்.
* மாதவன் மதனகோபால் எனும் தொழிலதிபர் கேரக்டரில் நடித்திருக்கிறார். தீபா என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதுப், ஸ்ரீமன், ராம்ஜி உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.
* களவாணி ஓவியா கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
* இப்படத்தில் கமல் நாயகனாக நடித்திருப்தோடு மட்டும் அல்லாமல் திரைக்கதை மற்றும் ஐந்து பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்கள் தமிழ் இலக்கியம் முதல் காமெடி வரை பல பாடல்களை உள்ளடக்கியுள்ளது.
* தேவிஸ்ரீ பிரசாத்தின் துள்ளலான இசையில் நெஞ்சை அள்ளும் மெலடி, வசீகரிக்கும் பாட்டு என ஆறுபாடல்கள் இடம்பெற்றுள்ளன.
* பாடல்களுக்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக நடனம் அமைத்து இருக்கிறார் ஷோபி.
* சண்டைக்காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ள ரமேஷ், ஹைலைட்டாக பிரான்சின் ஹியூகோ பிரல்லியர், மலேசியாவின் வில்லியம் ஹாங் ஆகியோருடன் சண்டைக்காட்சிகள் அமைத்துள்ளார்.
* இந்த படத்தின்மூலம் கேமராமேனாக அறிமுகமாகும் மனுஷ் நந்தன், அனைத்து காட்சிகளையும் டிஜிட்டல் வடிவில் படமாக்க ரெட் எம்.எக்ஸ் கேமராவை பயன்படுத்தியிருக்கிறார்.