Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரள விழாவில் தமிழர்களை இழிவுபடுத்திய முன்னணி நடிகர்!

22 நவ, 2010 - 13:26 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் முன்னணி நடிகர் ஒருவர் கேரளாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் இழிவு படுத்தி பேசியதாக கூறி அந்த நடிகருக்கு வி.சி.குகநாதன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

குரு ராஜேந்திரா மூவிஸ் சார்பில், டைரக்டர் வி.எஸ்.கருணாகரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகி வரும் புதிய படம் உங்கள் விருப்பம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் கலந்து கொண்டு இசையை வெளியீட்டு பேசினார். அவர் பேசுகையில், நேற்று நான் மலையாள தொலைக்காட்சி சேனல் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு விருது வழங்கும் விழா நடந்தது. அதில் தமிழ் சினிமா முன்னணி நாயகன் ஒருவர் கலந்து கொண்டு மேடையில் பேசினார். தான் மலையாள சினிமாவில் நடிக்க விரும்புவதாக கூறிய அந்த நடிகர், மலையாள சினிமாவில் நடிக்க நிறைய திறமைகள் வேண்டும்; நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் சினிமாவுக்கு அது தேவையில்லை; நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். மலையாளத்தில் சின்ன கேரக்டராக இருந்தாலும் சொல்லுங்கள். வந்து நடித்துக் கொடுக்கிறேன், என்று பேசி தமிழ் சினிமாவை கொச்சைப்படுத்தினார். அதோடு, அந்த விழாவில் திரண்டு வந்திருந்த ரசிகர்களை பாராட்டிய அந்த நடிகர், தமிழகத்தில் இதுபோல கூட்டத்தை பார்த்ததில்லை என்றும் கூறி தமிழர்களை கொச்சைப்படுத்தினார். அவரது இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த படத்தில்கூட வெளிமாநிலத்தவர்கள் இருக்கிறீர்கள். தமிழ் சினிமாவில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தயவு செய்து தமிழனை இழிவு படுத்தாதீர்கள். இனிமேலும் யாராவது இதுபோல பேசினால் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம், என்று ஆவேசமாக கூறினார்.

வி.சி.குகநாதன் ‌கடைசி வரை அந்த நடிகரின் பெயரை மேடையில் சொல்லவில்லை. முன்னணி நடிகர் என்று சொன்னதால் யார் அந்த மலையாள விசுவாசி என்று தெரிந்து கொள்ள மேடையில் இருந்தவர்களும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த சினிமா பிரபலங்களும், பத்திரிகையாளர்களும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் வி.சி.குகநாதன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். பின்னர் விசாரிக்கையில் அந்த நடிகர் ஆர்யா என தெரியவந்தது. மதராசபட்டணம், பாஸ் என்கிற பாஸ்கரன் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, கேரளாவை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.
 

Advertisement
கருத்துகள் (114) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (114)

sankar - pune,இந்தியா
12 மே, 2011 - 10:20 Report Abuse
 sankar இந்த வார்த்தையெல்லாம் கேட்டுட்டு இனியும் நீ உயிரோட இருக்கனுமா ஆர்யா யோசிச்சு பாரு
Rate this:
ஹரேரம் - CHENNAI,இந்தியா
06 மே, 2011 - 16:11 Report Abuse
 ஹரேரம் இங்கே உணர்ச்சிவச பட்டு எழுதி இருக்கும் வாசகர்களை பார்த்தல் சிரிப்புதான் வருகிறது. மலையாளியை திட்டுவதால் என்ன ப்ரயோஜினம். உங்கள் தமிழ் நாட்டில் தான் அரசியல் வாதி கைது சையபட்டால் உடனே தீ குளிக்கிறார்கள். உலகில் இது போன்ற கலாச்சாரம் எங்குமே பார்கமுடியது.
Rate this:
பாலச்சந்திரன் - blancmesnil,பிரான்ஸ்
06 மே, 2011 - 12:21 Report Abuse
 பாலச்சந்திரன் இவர்கள் என்னதான் பேசினாலும் எமது தமிழர்களுக்கு ரோசமே வராது. இன்னும் மலையாளிகலையே நம்பிக்கொண்டிருக்கிரர்கள். ஏன் தமிழன் திருந்த முடியாதா ?
Rate this:
mani - pondy,இந்தியா
05 மார், 2011 - 14:17 Report Abuse
 mani வளத்து விட்டோன வெளில போய் ipdithaanda பேசுவிங்க
Rate this:
kiruthika - chennai,இந்தியா
28 பிப், 2011 - 11:48 Report Abuse
 kiruthika உனக்கு எவளோ திமிரு இருந்தா தமிழ் நாட்ல இருந்திட்டு , எங்கள பத்தியே தப்பா பேசுவ ... நன்றி கெட்ட மனுஷன் ...
Rate this:
மேலும் 109 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in