ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை த்ரிஷா குறைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தால், அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது அவருடைய மேனேஜர் கிரிதர், தமிழ், கன்னடத்தில் தயாரிக்க உள்ள ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கில் 'லவ் யு பங்காரம்' என்ற படத்தை இயக்கிய கோவி இயக்க உள்ளார். த்ரிஷாவின் மேனேஜேரான கிரிதர் இதற்கு முன் நாக சௌரியா, அவிகா கோர் நடித்த 'லட்சுமி ராவே மா இன்டிக்கி' என்ற தெலுங்குப் படத்தை தயாரித்துள்ளார்.
த்ரிஷா இதுவரை எந்த ஒரு திகில் படத்திலும் நடித்து கிடையாது. அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு த்ரிஷாவுக்கு பயம் என முன்னர் செய்திகள் வெளிவந்தது. ஆனால், த்ரிஷா அதை மறுத்தார், எனக்கு அந்த மாதிரியான படங்கள் வருவதில்லை, அதனால் அப்படிப்பட்ட படங்களில் நடிக்கவில்லை என்றார்.
இப்போது த்ரிஷாவைத் தேடி இந்தப் படம் வெளிவந்ததால் த்ரிஷா நடிக்க சம்மதித்தாராம். 'இந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரமும் என்னை மிகவும் அற்புதமாக உள்ளது. படப்பிடிப்பு மே மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது,” என த்ரிஷா தெரிவித்துள்ளார்.