ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
1997ல் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க படத்தை இயக்கியவர் ஆர்.பாலு. அதையடுத்து உன்னுடன் என்ற படத்தை இயக்கியவர். பின்னர் பல ஆண்டுகளாக எந்த படமும் இயக்கவில்லை. ஆனால் 17 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற பெயரில் இணையதளத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ள அவர், அப்படத்தில் சின்னத்திரை காம்பையர் ஆனந்த கண்ணனை ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார்.
அப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. சின்னத்திரையில் நிகழ்சசி தொகுப்பாளர்களாக இருந்து சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் உள்பட பல நடிகர்கள் தற்போது சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருப்பதால் ஆனந்த கண்ணன் நடித்துள்ள இந்த படமும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கும் ஆர்.பாலு, இதன்பிறகு தனது சினிமா மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்.
அதேபோல் ஏப்ரல் 16-ந்தேதி அப்படத்தை வெளியிடும் அவர், இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற டைட்டிலை ஒருமுறை பார்த்தேன் என்று மாற்றி வெளியிடுகிறார். முன்னதாக, இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே மேலும் சில படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்று சில புதுமுக டைரக்டர்களிடம் கதை கேட்டு வரும் ஆனந்த கண்ணன், எனக்கு சின்னத்திரை மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் நான் நடித்துள்ள படத்துக்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.