ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
முதன் முறையாக நான்கு முதன்மை தொழில்நுட்ப கலைஞர்கள், முதன்மை கதாப்பாத்திரங்களாக நடிக்கும் திரைப்படம் 'கள்ளப்படம்'. இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் ஸ்ரீராம சந்தோஷ். பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் PC ஸ்ரீராம் அவர்களின் உதவியாளரான சந்தோஷ் கலையுலகிற்கு ஜாம்பவான்களை தந்த கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர்.
“பல்வேறு வடிவங்களை வண்ணத்துடன், எண்ணத்திலும் கொண்டிருந்த நான் ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டேன். PC ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளனாக சேர்ந்தேன். நானும் இயக்குனர் வடிவேல் அவர்களும் நண்பர்கள். எங்களது பதிமூன்று வருட நட்பில் நாங்கள் அதிகம் பகிர்ந்துக் கொண்டது சினிமாதான். புதிய பரிமாணத்தில் சினிமாவை எடுத்து செல்ல வேண்டும் என்று எங்களுக்குள் எழுந்த சிறிய சிந்தனைதான் ' கள்ளப்படம்'.
ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிற கள்ளப்படத்தில் நடிகனாகவும் அறிமுகமாகிறேன். நடிப்பில் எனக்கு பரீட்சியமும் இல்லை, ஆசையும் இல்லை எனினும் இப்படத்திற்கு, இக்கதாப்பாத்திரங்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டும் என்று எண்ணிதான் இப்படத்தில் நாம் நாமாகவே நடிக்கலாம் என்று வடிவேலிடம் கூறினேன். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் புதிதகா இருக்க இதற்கு ஒப்புக் கொண்டார்.” என்றார் ஸ்ரீராம சந்தோஷ்.
மேலும் தனது ஒளிப்பதிவை பற்றி கூறுகையில் “ கேமரா முன் நடிப்பதும், கேமராவிற்கு பின் நின்று ஒளிப்பதிவு செய்வதும் என்பது மிக கடினமாக இருந்தது. படபிடிப்பு தளத்தில் லைட்ஸ், ஆங்கிள், ஷாட் என ஒளிப்பதிவு வேலைகளை அமைத்து விட்டு பின் மேக்-அப் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும் என்ற பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இப்படத்தில் நடிக்க செய்தாலும், திரைக்கதைக்கு வேகம்கூட்டும் வகையில் ஒளிப்பதிவில் பல புதிய காட்சி அமைப்புகளை முயற்சி செய்துள்ளோம். ஒரு ஒளிப்பதிவாளன் என்பதால் நடிக்கும்போதும் கேமரா எப்படி நகர்கிறது, ஷாட் எப்படி வரப்போகிறது என்ற ஆவலும் பற்றிக் கொள்ளும்” என்றார்
நடிகனாக தான் உணர்ந்தவை என்று கூறுகையில்“ இது நாள் வரையில் நடிப்பு என்பது சாதாரணம் இயக்குனர் சொல்வதை மட்டும் செய்துக் கொண்டு இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். நடிப்பு என்பது சொல்லிக் கொடுத்து வருவதில்லை அந்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்துவதே நடிப்பு என்று இப்படத்தில் நடிக்கும்போதுதான் எனக்கு தெரிந்தது”. படம் மார்ச் 20 ஆம் தேதி வெளிவருகிறது எனினும் இன்று எனக்கு முக்கியமான நாள் எனது குரு PC ஸ்ரீ ராம் சார் எங்களை வாழ்த்தி மெசேஜ் அனுப்பி இருந்தார். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. PC சார் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு உயரங்களை அடைவதே எனது குறிக்கோள்“ என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ஸ்ரீராம சந்தோஷ்.