ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடகறி, திருமணம் என்னும் நிக்கா படங்களுக்கு பிறகு ஜெய்யின் நடிப்பில் உருவான வேட்டை மன்னன், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், அர்ஜூனன் காதலி ஆகிய படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. அதனால் இப்போது அந்த படங்களை கிட்டத்தட்ட மறந்தே விட்ட ஜெய், புகழ், வலியவன் படங்களில் முழுவீச்சில் இருக்கிறார்.
இதில் வலியவன் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், புகழ் படத்தில் இவன் வேற மாதிரி சுரபியும் நடித்துள்ளனர். இவர்களில் ஆண்ட்ரியா ஓரளவு பேசப்படும் நடிகைதான் என்றாலும், இது போதாது என்கிறாராம் ஜெய்.
அதாவது, ராஜா ராணி படத்தில் தனக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தது போன்று பிரபல நடிகைகளாக தன்னுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் அவர். அதனால் தற்போது இரண்டு டைரக்டர்களிடம் கதை கேட்டிருக்கும் ஜெய், இந்த படங்களுக்கு நான் கால்சீட் தர வேண்டும் என்றால் மேல்தட்டு ஹீரோயினை புக் பண்ணுங்கள். அதன்பிறகுதான் நான் கால்சீட் தருவது பற்றி முடிவெடுப்பேன் என்று கண்டிசனாக சொல்லியிருக்கிறாராம்.
ஆக, இதுவரை கதையை மட்டுமே கேட்டு படங்களை ஓகே செய்து வந்த ஜெய்யும், இப்போது கதாநாயகி விவகாரத்தில் மூக்கை நுழைப்பதால் அவரிடம் கதை சொல்லி திருப்திபடுத்திய டைரக்டர்கள், இப்போது அவர் எதிர்பார்க்கிற மாதிரி கதாநாயகியை புக் பண்ண வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறார்கள்.