ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகைகளை பொறுத்தவரை, வயது ஏற ஏற, மார்க்கெட் இறங்கி விடும்; சம்பளமும் இறங்கி விடும் என்பது, கோலிவுட்டின் எழுதப்படாத விதி. ஆனால், இந்த விதியை, சுக்குநுாறாக அடித்து நொறுக்கி விட்டார் நயன்தாரா. இளம் வயதில் நடிக்கும்போது, ஒரு சில லகரங்களைத் தான் சம்பளமாக வாங்கினார். ஆனால், இப்போது, ஒரு கோடி, இரண்டு கோடி என்ற கணக்கை எல்லாம் தாண்டி, மூன்று கோடியை தொட்டுள்ளது அம்மணியின் படக்கூலி. ஓரளவுக்கு திருப்தியான கேரக்டராக இருந்தால் போதும், மூன்று கோடியை வெட்டினால், அடுத்த நிமிடமே, கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். ஆனாலும், சம்பள விஷயத்தில், தன் தாய் மொழியான மலையாள படங்களுக்கு மட்டும் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளார். சித்திக் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு, மிக குறைந்த சம்பளம் மட்டுமே பெற்றுள்ளாராம். வளரட்டும் தாய் மொழி பாசம்.