ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் நடிகை சுஹாசினி. தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சுஹாசினி மணிரத்னம். நடிகையாக மட்டுமல்லாது சமூக ஆர்வலராகவும் இருக்கிறார். இவர், ஐரோப்பா கண்டத்தில் உள்ள கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில் முறைப்படி பதவியேற்று கொண்டார். சுஹாசினிக்கு லக்சம்பர்க் நாட்டின் தூதர் சாம் ஸ்ரீநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சுஹாசினி, கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதராக நான் நியமிக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அத்துடன் அதற்காக நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்வேன் என்று கூறியுள்ளார்.