ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம்மேனனின் பேவரைட் ஹீரோவாக இருந்தவர் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஹிட் படங்களை கொடுத்த அவர்கள், துருவநட்சத்திரம் படத்திலும் இணைய இருந்தனர். ஆனால், சிங்கம் படத்தில் நடித்திருந்த சூர்யா, அதே வேகத்தில் அதே ஆக்சனில் எனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று சொன்னவர், கெளதம் மேனன் சொன்ன கதையில் சிலபல திருத்தங்களை செய்யச்சொன்னார்.
ஆனால் அதற்கு முன்புவரை சூர்யாவிடம் கதையே சொல்லாமல் படம் பண்ணிய கெளதம்மேனன், தன்னிடம் அவர் துருவ நட்சத்திரம் கதையை துருவி துருவி கேட்டதால், டென்சனாகி விட்டார். இதுக்கு மேல கதையில் மாற்றம் செய்வதாக இல்லை என்று சற்று தூக்கலான குரலில் சொல்லி, அதற்கு மேல் அவரிடம் பேச விரும்பாமல், நண்பர்களாக இருந்தோம், நண்பர்களாகவே பிரிவோம் என்று கைகுலுக்கி விட்டு விடைகொடுத்தார்.
விளைவு, அதையடுத்து அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி வெற்றி பெற்ற கெளதம்மேனன், இப்போது சிம்புவைக்கொண்டு அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இதையடுத்து அவர் விக்ரமை வைத்து ஒரு அதிரடி படத்தை இயக்கப்போகிறார்.