ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2008ம் ஆண்டு வெளிவந்த 'பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமானாவர் விசாகா சிங். அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2013ம் ஆண்டு வெளிவந்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நாயகியாக நடித்தார். அடுத்து 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது 'வாலிப ராஜா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
“அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கதைகளும், சிறப்பான இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருவதில்லை. சில சமயங்களில் நல்ல கதாபாத்திரம் கூட அமைவதில்லை. அதற்கும் மேல் ஒரு படத்தில் நடிப்பதற்கு நியாயமான சம்பளத்தைத் தரக் கூட சிலர் யோசிக்கிறார்கள். பெரிய நடிகை சின்ன நடிகை என்ற வித்தியாசம் பார்க்காமல் சம்பளம் தர வேண்டும். புதியவர்கள் என்றால் இலவசமாகக் கூட நடித்துத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை எப்படி செய்ய முடியும். அதனால்தான் பல படங்களை நான் தவிர்த்துள்ளேன், ஆனால் அவற்றை நான் நிராகரிக்கவில்லை,” என விளக்கம் தருகிறார் விசாகா சிங்.