ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சொட்டு நீலம் டோய், ரீகல் சொட்டு நீலம்டோய் -என்று விளம்பர படத்திற்கு அப்போது திலீப்குமாராக இருந்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்ததைக்கேட்டு ஈர்க்கப்பட்ட மணிரத்னம், தனது ரோஜா படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அந்த படத்தில் மேற்கத்திய இசையை கலந்து ரகுமான் கம்போஸ் செய்த பாடல்கள் பெரிய அளவில் ரீச் ஆனது.
அதனால் அந்த படமே அவருக்கு நல்லதொரு தொடக்கமாக அமைந்தது. அதையடுத்து புதிய முகம், ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்த ரகுமான், தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார். பின்னர் பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் இசையமைத்தவர், ஆஸ்கர் விருது பெற்று உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார்.
ஆனபோதும் தன்னை அறிமுகம் செய்த மணிரத்னமே தனது குருநாதர் என்று ஒவ்வொரு மேடைகளிலும் அவர் கூறி வருகிறார் ரகுமான். இந்த நிலையில், தற்போது துல்கர்சல்மான்-நித்யாமேனனை வைத்து மணிரத்னம் இயக்கியிருக்கும் ஓ காதல் கண்மணி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலை கம்போஸ் செய்தபோது மென்டல் மனதில் என்ற வார்த்தையை போட்டு பாடிக்காண்பித்தாராம் ரகுமான்.
அது மணிரத்னத்துக்கு ரொம்ப பிடித்து விட, அந்த பாடலுக்கு மேலும் சில வரிகளை தானும போட்டு எழுதினாராம். அதையடுத்து, ரகுமானும் சில வரிகளை எழுத இரண்டு பேரும் சேர்ந்தே அந்த பாடலை எழுதி விட்டார்களாம். இப்போது அந்த பாடலின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு நல்ல வரவேற்பாம். அதனால் இன்று 17-ந்தேதி அந்த மென்டல் மனதில் மொத்த பாடலும் வெளியிடப்பட இருப்பதால் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கிறாராம் மணிரத்னம்.
ஆக, ஏ.ஆர்.ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த மணிரத்னமே இப்போது அவரை பாடலாசிரியராகவும் அறிமுகம் செய்திருக்கிறார்.