ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சில நாட்களுக்கு முன்னர் நடிகைகள் அமலாபாலும், பாவனாவும் மிஸ்ஸிங்' ஆகிப்போனார்கள் என்று சொல்லும்போது கேட்கும் உங்களுக்கு எப்படி இருக்கும்..? ஆனால் அதைவிட இது பொய்யாக கிளப்பிவிடப்பட்ட செய்தி என்பதை அறிந்தபோது சம்பந்தப்பட்ட இருவருக்கும் எப்படி இருந்திருக்கும்? நினைத்து பாருங்கள்.. சில நாட்களுக்கு முன் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்ட செய்தி ஒன்றில் 'படத்தில் காணப்படும் சிறுமி காசர்கோடு ரயில்வே ஸ்டேசன் அருகில் முகாமிட்டிருந்த ஜிப்சி கூட்டத்தை சேர்ந்தவர்” என குறிப்பிட்டு அவரை காணவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரை உற்று பார்த்தவர்களுக்கோ அதிர்ச்சி. காரணம் அதில் இடம்பெற்றிருந்தது நடிகை அமலாபாலின் சிறுவயது புகைப்படம். அதைத்தான் 'காணவில்லை' என்கிற பேப்பர் கட்டிங் டிசைனில் வெளியிட்டு. அதில் 22-11-2013 அன்று முதல் காணாமல் போய்விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கு சில நாட்களுக்கு முன்பு, இதேபோல சிக்கியவர் பாவனா. ஆனால் அவர் புகைப்படம் இடம்பெற்ற செய்தியில் 22-12-2015 அன்றுமுதல் காணவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை யார் அனுப்பியது என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.