மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்தவர் சரவணன். ''எங்கேயும் எப்போதும்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சரவணன், வாகனங்களில் அதிவேகத்தில் செல்வதால் நடக்கும் விபத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கினார். முதல்படத்திலேயே ஒரு வித்தியாசமான கதையை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தார். தொடர்ந்து, ''இவன் வேற மாதிரி'' படத்தை இயக்கிய சரவணன், இப்போது மீண்டும் ஜெய்யை வைத்து வலியவன் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜெய், ஆண்ட்ரியா நடித்துள்ள இப்படம் ரொமான்டிக் - ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.என்.சம்பத், இயக்குநர் சரவணனை புகழ்ந்து கூறியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பவர் இயக்குநர் சரவணன், காலை 9 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் இரவு 9 மணி வரை ஸ்பாட்டிலேயே இருப்பார். சின்ன காட்சியாக இருந்தாலும் கூட, அதை பிரமாண்டமாக காண்பிப்பவர் சரவணன். நான் நினைத்ததை சரவணன் கொண்டு வந்துள்ளார். இந்த வலியவன் படம் ரொமான்டிக், ஆக்ஷ்ன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. சரவணன் பார்க்கத்தான் அமைதியாக இருப்பார், ஆனால் அவரது படம் அப்படி இருக்காது. குறிப்பாக இந்த வலியவன் படத்தின் ஆக்ஷ்ன் பிளாக்குகள், ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். அந்தளவுக்கு படத்தின் ஆக்ஷ்ன் காட்சியை சில்வாவும், சிவாவும் அற்புதமாக படமாக்கியுள்ளனர். என்னை பொறுத்தவரை சரவணன் தான் அடுத்த முருகதாஸ் என்று கூறியுள்ளார்.