ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குறும்படங்களில் நடித்து நடிகரானவர் விஜயசேதுபதி. அதோடு சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன அவர், பின்னர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என தனது ஆரம்ப காலத்தில் குறும்பட டைரக்டர்களின் இயக்கத்தில்தான் நடித்தார்.
அப்படி அவர் நடித்த பல படங்கள் அவருக்கு வெற்றியாகவே அமைந்து வந்தன. ஆனால், இப்போது விஜயசேதுபதியின் நிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது புறம் போக்கு படத்தில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல டைரக்டர்களின் படங்களில் நடிக்கவே முதலிடம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதனால் விஜயசேதுபதியை மனதில் கொண்டு வித்தியாசமான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்ட சில குறும்பட டைரக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீறி அவர்கள் அவரை துரத்தினால், இன்னும் 5 வருடங்கள் வரை நான் ரொம்ப பிசி பாஸ். அதனால் அதற்குள் ஏதாவது படத்தை இயக்கி விடுங்கள் அதன்பிறகு நாம் சந்திப்போம் என்கிறாராம்.