ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அதனால் அந்த படம் ஹிட்டாக அந்த பாடலும் முக்கிய காரணமாக இருந்தது. அதையடுத்து, அவர் இயக்கிய அஞ்சாதே படத்தில் கத்தாழ கண்ணாலே குத்தாத நீ என்னை என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது.
அதேபோல், யுத்தம செய் படத்திலும் கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா என்ற பாடல் இப்போது வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி மிஷ்கின் படங்களின் குத்துப்பாடல்கள் பெரும்பாலும் அவரது வெற்றிக்கு உறுதுணையாகவே இருந்தன. ஆனபோதும், அந்த பாடல்களெல்லாம் எனது அனுமதியின்றி தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்காக வைக்கப்பட்டவை என்று கூறுகிறார் மிஷ்கின்.
அதோடு, என் படங்களில் பாடல்கள் இடம்பெறுவதே எனக்கு பிடிக்காது. பாடல்கள் படத்தை கெடுத்து விடும் என்பதே எனது கருத்து. முக்கியமாக பாடல்கள் இல்லாத படங்களை இயக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று மேடைகளில் கூறி வருகிறார். அப்படி கூறும் மிஷ்கின், தற்போது கள்ளப்படம் என்ற படத்தில் வெள்ளக்கார ராணி கொல்லி மலைத்தேனி -என்றொரு குத்துப்பாடலை பாடியிருக்கிறார். கன்னித்தீவு பொண்ணா பாடல் பாணியில் அமைந்த இந்த பாடலை, பக்கா பாடகர்களைப்போன்றே அசத்தலாக பாடியிருக்கிறார் மிஷ்கின். குத்துப்பாடல்களே எனக்கு பிடிக்காது என்று சொல்லும் மிஷ்கினா இப்படி பாடியிருக்கிறார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. அந்த அளவுக்கு குத்துப்பாட்டை குஷியாக பாடியிருக்கிறார் அவர்.