ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1980ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். தமிழ் நாட்டில் தெலுங்கிலேயே வெளிவந்து இங்கும் 100 நாட்கள் ஓடியது. கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். சோமயாஜூலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை துளசி குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு இன்று(மார்ச் 13ம் தேதி) ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை துளசியை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் இதோ....
என் தந்தை இறந்த பின்னர் குடும்பத்தின் சுமை காரணமாக சினிமாவிற்கு வந்தேன். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக ''சீதா மகாலெட்சுமி'' என்ற படத்தில் அறிமுகமானேன். கே.விஸ்வநாத் இயக்கினார். அதையடுத்து, சங்கராபரணம் படத்தில் அதே இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கத்தில், நடிக்கும் வாய்ப்பு பெற்றேன். இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத்தான் நான் உள்ளிட்ட அந்த படத்தில் நடித்த அனைவரும் செய்தோம்.
பல விருதுகளை வாங்கி குவித்த படம் சங்கராபரணம். இப்படத்தை வாங்கி வௌியிட்ட அனைவருக்கும் அதிக லாபத்தை கொடுத்த படம் இது. ஒலி-ஔியாலும், கர்நாடக இசையில் படம்முழுக்க பரவ செய்து, மஞ்சு பார்க்கவி, சோமயாஜூலுவின் யதார்த்த நடிப்பால் பல இடங்களில் பேசப்பட்டது இப்படம். எனது 10 வயதில் இந்த ஒரு படத்திற்காக மட்டும் 23 விருதுகள் கிடைத்தது.
என்னை அழைத்து, என்னை பக்குவப்படுத்தி இப்படத்தில் நடிக்க வைத்தனர். இந்த ஒரு படம், என்னை பல படங்களுக்கு வௌிச்சம் போட்டு காட்டியது. என் தந்தை இறந்த பின்னர், என் தாயின் பெரும் முயற்சிக்கு பின்னரே நடிகையானேன். நான் நடிகையானதில் என் தாய்க்கு பெரும் பங்கு உண்டு.
சங்கராபரணம் படத்தில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் சோமயாஜூலு, என் கன்னத்தில் அறைவது போன்று ஒரு காட்சி. அந்த ஒரு காட்சிக்காக மட்டும் 7 முறை அறை வாங்கினேன். இன்று நான் ஒரு சிறந்த நடிகையாக, பல மொழிகளிலும் பேசப்படுகிறேன் என்றால் அதற்கு சங்கராபரணம் கொடுத்த விருதும், அறையுமே காரணம்.
இவ்வாறு துளசி கூறினார்.