ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம்பிரபுவுடன் நடித்த அரிமா நம்பி ப்ரியா ஆனந்துக்கு முக்கிய படமாக அமைந்தது. அதோடு அந்த படத்தில் பாரில் சரக்கு அடிப்பது போன்றும் நடித்து சர்ச்சை உருவாக்கிய ப்ரியாஆனந்த், பார் சீன் என்பதால் அப்படி நடித்தேன். மற்றபடி தமிழ் கலாச்சாரத்துக்கு எந்த இழுக்கையும் நான் ஏற்படுத்திவிடவில்லை என்று அப்போதைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் அந்த படத்திற்கு பிறகு ப்ரியாஆனந்த் நடித்த இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை,. அதனால் அதன்பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்த வை ராஜா வை படத்தில் நடித்து விட்டு அதன் ரிசல்டாவது தனக்கு சாதகமாக அமையுமா? என்று சில மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார் ப்ரியாஆனந்த்.
இந்த நிலையில், அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்து விக்ரமை வைத்து தான் இயக்கும் படத்தில் ப்ரியாஆனந்துக்கு 2வது நாயகி வேடம் கொடுத்துள்ளார். இதேபடத்தில் முதல் நாயகியாக காஜல்அகர்வால் நடித்தபோதும், ப்ரியாஆனந்துக்கும் விக்ரமுடன் பாடல் காட்சியெல்லாம் உள்ளதாம். அதனால், கிடைக்கிற வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டு முன்னுக்கு வந்து விட வேண்டும் என்று அப்படத்தில் கமிட்டாகியிருக்கும் ப்ரியாஆனந்த், மேலும் சில அபிமான டைரக்டர்களிடமும் படவேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்.