ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கி உள்ள, ஓ காதல் கண்மணி படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது. இந்த மாதம் பாடல்கள் வெளிவர இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார்.
படத்தில் பணியாற்றியது குறித்து வைரமுத்து கூறியதாவது: ஓகே கண்மணி தலைப்பே அழகானது. மணிரத்னம் என்னிடம் எந்த கதை சொன்னாலும் அதை 3 நிமிடத்திற்கு மேல் சொல்ல மாட்டார். 3 நிமிடத்திற்குள் விளக்க முடியாத கதை, கதையே அல்ல என்பது அவரது எண்ணம். அவரது வசனங்கள் கூர்மையாகவும், நறுக்கு தெறித்தார்போலவும், சுருக்கமாகவும் இருப்பதைப் போலவே அவர் கதை சொல்லும் முறையும் இருக்கும். எது தேவையோ எந்த சொற்கள் மட்டும் தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவார். சொல்லி முடித்த மூன்று நிமிடத்திற்குள் முழு கதையும் என் மூளைக்குள் வந்து தங்கிவிடும்.
இரண்டு பாத்திரங்கள் அவர்களுக்குள் ஒரு காதல், ஒரு நிபந்தனை அவர்களின் மனவோட்டம், எண்ணவோட்டம், இவைகளை பற்றிய கோடுகளை மட்டும் வரைந்து காட்டினார். சித்திரத்தை நான் வரைந்து கொடுத்துள்ளேன். இது மணிரத்தினத்தின் தனி பாணி. ஓகே கண்மணி அழகான காதல் தளம். மணிரத்னம் ஆடி களிக்கிற பாடல், ஆடி ஜெயிக்கிற பாடல். அந்த களத்தில் மீண்டும் அவர் விருப்பத்தோடு இறங்கி இருக்கிறார். இந்த களத்தில் அவர் வெற்றி பெறுவார். என்கிறார் வைரமுத்து.