ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கடந்த 8ந் தேதி நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் பேசிய தயாரிப்பாளர்கள் சிலர், கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதாவும், சென்சார் சொன்ன திருத்தங்களை செய்ய லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார்கள். இதனை கியூப் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து கியூப் சேவை செய்து வரும் ரியல் இமேஜ் மீடியா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர் செந்தில்குமார், மண்டல தலைவர் ஜானகி ஆகியோர் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக படங்களை கியூப்பில் வெளியிட்டு வருகிறோம். ஒரு காட்சிக்கு இவ்வளவு ரூபாய் என்று கணக்கிட்டுதான் கட்டணம் வசூலிக்கிறோம். ஒரு வாரத்துக்கு அதிக பட்சம் 3500 ரூபாய்தான் கட்டணமாக வரும். எவ்வளவு நாள் ஓடினாலும் 20 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வராது. மாஸ்டரிங் தொழில்நுட்ப வேகைளுக்காக எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. சென்சார் திருத்தங்களை இரண்டு முறை இலவசமாவே செய்து கொடுக்கிறோம். மூன்றாவது நான்காவது முறைக்கே 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். எந்த படமும் அந்த நிலைவரை செல்வதில்லை. இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிக்கிறது என்ற குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.