ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ஆனாலும் நிதானமாக காலஅவகாசம் எடுத்துக் கொண்டு அடுத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக் ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்த இப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். வை ராஜா வை படத்தின் படப்பிடிப்பு கோவா உட்பட பல ஊர்களில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்த கையோடு எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங் பணிகளும் முடிவடைந்தன.
வை ராஜா வை படத்தை கடந்த டிசம்பரிலேயே ரிலீஸ் செய்ய விரும்பினார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்கு முன் அனேகன் படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று விரும்பினார் கல்பாத்தி அகோரம். அதன்படி சில வாரங்களுக்கு முன் அனேகன் படத்தை ரிலீஸ் செய்தார். அனேகன் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் மனதை தேற்றிக் கொண்டு வை ராஜா வை படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். ஏப்ரல் மாதம் வை ராஜா வை வெளியாகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக தேதியை அறிவிக்க இருக்கிறாராம் கல்பாத்தி அகோரம்.