ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதுரை சம்பவம், சிகப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கிய யுரேகா இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் தொப்பி. முரளிராம், ரக்ஷா நடித்துள்ளனர். ராம் பிரசாத் சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை பரமராஜ் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் யுரேகா. நேற்று மதியம் 3 மணி அளவில் அப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இடைவெளியில் நிருபர்கள் முன்பு தோன்றினார் யுரேகா.
அப்போது, இன்று காலை முதல் காட்சியை நானும் ரசிகர்களோடு அமர்ந்து தியேட்டரில் பார்க்க சென்றேன். பாதி படத்துக்கு பிறகு எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. காரணம், நான் கஷ்டப்பட்டு படமாக்கிய பல காட்சிகளை காணவில்லை. விசாரித்தபோது, பல காட்சிகளை தயாரிப்பாளரே கத்தரித்து நீக்கியுள்ளது தெரியவந்தது.
ஒரு டைரக்டர் என்ற முறையில் அதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. அதைப்பார்த்து என் கண்களில் கண்ணீர் கசிந்து விட்டது. இந்த படத்தில் நான் இயக்குனராக வேலை செய்ததற்கான சம்பளத்தையே தரவில்லை. அதைகூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் என் படைப்பில் எனது அனுமதி இல்லாமல் கைவைத்தது தவறு. என்னுடைய அனுமதி இல்லாமல் தயாரிப்பாளர் தலையிட்டதை என்னால் ஏற்க முடியவில்லை.