ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினி, லிங்கா பட தயாரிப்பாளர் மீதான புகாரை, பதிவு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள, மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின், நிர்வாக பங்குதாரர் சிங்கார வடிவேலன் தாக்கல் செய்த மனு:
வினியோக உரிமை: நடிகர் ரஜினி நடித்த, லிங்கா படத்துக்கு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான, வினியோக உரிமை பெற்றிருந்தேன். படத்தை, வினியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி திரையிட்டு காட்டவில்லை. படம் நன்றாக ஓடும் என்றும் தோல்வியடைந்தால், பணத்தை ஈடு செய்வதாகவும், வினியோகஸ்தர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. அதை நம்பி, 8 கோடி ரூபாய் அளித்தேன். சூப்பர் ஸ்டார் படம் என்பதால், தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், பணத்தை தந்தனர். ஆனால், லிங்கா படத்தை திரையிட்டதன் மூலம், குறைந்த அளவே வசூலானது. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பட்டது. தியேட்டர் உரிமையாளர்கள், இழப்பீடு தொகையை தரும்படி, என்னிடம் கேட்டனர். படத்தை திரையிடுவதற்கு முன், எங்களுக்கு திரையிட்டுக் காட்டியிருந்தால், வினியோகஸ்தர்கள் இவ்வளவு தொகையை கொடுத்து இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் வெங்கடேஷையும், ரஜினியையும், நாங்கள் அணுகினோம். வாய்மொழி உத்தரவாதத்தின்படி, இழப்பீடு தருமாறு கேட்டோம். வினியோகஸ்தர்களுக்கு, 33 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனக்கு மட்டும், 4.5 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, படத்தை வெளியிட்டதன் மூலம், லாபம் அடைந்ததாக, வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.