பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சென்னை: கணவர் நேரில் வந்து வருத்தம் தெரிவித்ததால், பெண் பாடல் ஆசிரியர் தாமரை போராட்டதை கைவிட்டார்.
சினிமா பாடலாசிரியர் தாமரைக்கும், கணவர் தியாகுவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு, தியாகு வீட்டிலிருந்து தலைமறைவானார்.'தியாகு மீண்டும் வீட்டிற்கு வரவேண்டும், இருபது ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்தார் என, தமிழ் சேவையாளர்கள் மூலம் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, சென்னை, சூளைமேட்டில் உள்ள, தியாகுவின் அலுவலகம் முன், தாமரையும் மகன் சமரனும் கடந்த, 27ம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.வேளச்சேரியில் உள்ள முதல் மனைவியின் மகள் வீட்டில், தியாகு இருப்பதாக கேள்விப்பட்டு, அங்கும், பிறகு, வள்ளுவர் கோட்டத்திற்கும் தாமரை போராட்டத்தை மாற்றினார். 3 நாட்களாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வந்தார்.இவரது போராட்டத்திற்கு, தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பும், நேற்று முன்தினம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்தன. திரைப்பட இயக்குனர் கவுதமன், புகழேந்திதங்கராஜ், பாடலாசிரியர்கள் சிநேகன், கிருதியா என, பத்துக்கும் மேற்பட்ட, சினிமா பாடலாசிரியர்கள், நேற்று வள்ளுவர் கோட்டத்திற்கு நேரில் வந்து, தாமரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
'கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும், தங்களுக்கு என்றைக்கும் சங்கத்தின் ஒத்துழைப்பு உண்டு' என, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இத்துடன், சங்க நிர்வாகிகளின் சார்பில், தியாகுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையொட்டி, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தும் தாமரையை, அவரது கணவர் தியாகு, இரவு 9:20 மணிக்கு நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார். தாமரையின் விருப்பப்படி, நடுநிலை விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க சம்மதம் தெரிவித்தார். ''கடந்த எட்டு நாட்களாக, போராட்டத்தால், உங்களுக்கும், மகன் சமரனுக்கும் ஏற்பட்டுள்ள உடல் துன்பத்துக்காகவும் மனவேதனைக்கு உளமார வருந்துகிறேன்,'' என்றார். பிறகு, தாமரையையும், மகனையும் வீட்டிற்கு அழைத்து சென்றதால், தாமரையின், போராட்டம், நேற்று, எட்டாவது நாளுடன் முடிவிற்கு வந்தது.